போலி தடுப்பூசி ஆவணங்கள்... கனடாவில் வசமாக சிக்கிய இருவர்
அமெரிக்காவில் இருந்து ரொறன்ரோ திரும்பிய இருவர் போலி தடுப்பூசி ஆவணங்களை சமர்ப்பித்ததுடன், கொரோனா சோதனை மேற்கொண்டதாகவும் தவறான தகவல் அளித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி சுய தனிமைப்படுத்தலுக்கோ மீண்டும் கொரோனா சோதனைக்கோ அந்த இரு பயணிகளும் ஒத்துழைக்க மறுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் நடந்த இச்சம்பசம் தொடர்பில் விசாரணை முன்னெடுத்த அதிகாரிகள், குறித்த பயணிகள் இருவருக்கும் தலா 19,720 டொலர் அபராதம் விதித்துள்ளனர்.
ஜூலை 5ம் திகதியில் இருந்தே முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட கனேடியர்களுக்கு சுய தனிமைப்படுத்தலை ரத்து செய்துள்ளதுடன், வெளிநாட்டினருக்கு தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கவும் கோரியிருந்தது.
கனடா திரும்பும் பயணிகள் கண்டிப்பாக உண்மையான தகவல்களையும் தரவுகளையும் சமர்ப்பிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ள அதிகாரிகள், போலி ஆவணங்களும் தரவுகளும் கடுமையான குற்றமாக கருதப்படும் என அறிவித்துள்ளனர்.