இனவெறித்தாக்குதலால் கோமா நிலைக்கு சென்ற பிரபல வீரர்!
பிரித்தானியாவில் தாக்குதலுக்கு உள்ளானதால் கோமா நிலைக்கு சென்ற தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் தற்போது குணமடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சனிக்கிழமை இரவு பிரிட்ஜ்வாட்டர் பகுதியில் மர்ம நபர் ஒருவரால், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் மாண்ட்லி குமலோ (Mendeley Kumalo) திடீர் தாக்குதலுக்கு உள்ளானார்.
தாக்குதலில் பலத்த காயமடைந்த குமலோ (Mendeley Kumalo) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அந்த சம்பவத்தை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட வீரர் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர் என்பதால் அவர் (Mendeley Kumalo) மீது நிறவெறி தாக்குதல் நடத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில், கோமாவில் இருந்து வெளியேறிய குமலோவின் (Mendeley Kumalo) உடல்நலம் முன்னேற்றம் அடைந்து வருவதாக கூறப்படுகின்றது. அவருக்கு மூன்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், ரத்தக்கட்டி அகற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், குமலோவை (Mendeley Kumalo) கொடூரமாக தாக்கிய சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் 27 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.