ஒன்ராறியோவில் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி தொடர்பில் முதல் பலி
ஒன்ராறியோவில் ஆஸ்ட்ராசெனகா தெடுப்பூசி எடுத்துக் கொண்ட ஆண் ஒருவர் அரிதான ரத்தக்கட்டிகள் பாதிப்பால் மரணமடைந்துள்ளார்.
குறித்த தகவலை முதன்மை சுகாதார அதிகாரி மருத்துவர் Barbara Yaffe ஊடக சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
40 வயது கடந்த அந்த நபர் கொரோனா தடுப்பூசிக்கான முதல் டோஸ் மருந்தை ஏப்ரல் கடைசியில் பெற்றுக்கொண்டுள்ளார்.
தொடர்ந்து இரண்டாவது டோஸ் மருந்துக்காக காத்திருக்கும் நிலையில், அவர் ரத்தக்கட்டிகள் ஏற்பட்டு மரணமடைந்துள்ளார்.
இது தொடர்பில் விசாரணை நடந்து கொண்டிருப்பதால், மரணத்திற்கான இறுதி காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என மருத்துவர் Barbara Yaffe சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியால் ரத்தக்கட்டிகள் பாதிப்பு ஏற்படுவது என்பது மிக அரிது, ஆனால் பாதிப்பு ஏற்படுவது உண்மையும் கூட என்றார்.
இதுவரை 1 மில்லியன் ஒன்ராறியோ மக்கள் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளனர்.
அதில் 13 பேர்களுக்கு மட்டுமே ரத்தக்கட்டிகள் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.