மகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட தந்தை...சுவிஸில் அதிர்ச்சி சம்பவம்
தந்தை தனது மகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சுவிஸில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் செயின்ட் கல்லென் என்ற பகுதியில் 54 வயது ஆன் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். அவருக்கு மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகள் இருந்தன. இந்த நிலையில் வீட்டில் மனைவி மற்றும் முதல் குழந்தை ஆகியோர் வீட்டில் இல்லாத சமயத்தில் கணவர் தனது இரண்டாவது மகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஆனால் இச்சம்பவம் குறித்து அறிந்த அவர்கள் இருவரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதனால் மனநல மருத்துவர்கள் அவர்களுக்கு ஆலோசனை வழங்கி வருவதாக தெரிவித்துள்ளனர்.
அவர்கள் சுமார் 10 வருடமாக அந்த பகுதியில் மகிழ்ச்சியாக வசித்து வந்ததாகவும், இப்படி ஒரு சம்பவம் தங்களிக்கு அதிர்ச்சியாக உள்ளதாகவும் அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கொலை செய்ய எந்த ஒரு ஆயுதமும் பயன்படுத்தவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.