அமெரிக்காவில் 5 முதல் 11 வயது வரையிலானவருக்கு பைசர் தடுப்பூசிக்கு ஒப்புதல்
அமெரிக்காவில் 5 முதல் 11 வயதுடைய நபர்களுக்கு பைசர் தடுப்பூசி செலுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த உலக நாடுகள் தங்களது மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை முடக்கிவிட்டுள்ளன.
இதுவரையிலும் 18 வயதுக்கு மேலானவர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஒப்பதல் அளிக்கப்பட்ட நிலையில், 18 வயதுக்கு கீழானவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வந்தது.
சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் 5 முதல் 11 வயதுடைய 2 ஆயிரம் சிறுவர், சிறுமிகளிடம் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி பரிசோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையின் முடிவுகளின் மூலம் இந்த தடுப்பூசி 90 சதவீதம் செயல்திறன் கொண்டுள்ளதாகவும், ஆபத்தான பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து 5 முதல் 11 வயதுடைய சிறுவர், சிறுமிகளுக்கு பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை செலுத்த அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
இவர்களில் நபர் ஒருவருக்கு 10 மைக்ரோகிராம் அளவுக்கு மட்டுமே மருந்து செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, இது பெரியவர்களுக்கு வழங்கப்படும் மருந்தில் 3ல் 1 பங்கு என்பது குறிப்பிடத்தக்கது.