மீண்டும் ஆரம்பித்த தாக்குதல்கள்; ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் செல்ல அச்சம்
வளைகுடாவில் ஈரான்–அமெரிக்கா இடையிலான பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் ஹோர்முஸ் நீரிணை ஊடாக பயணிக்கும் கப்பல்கள் அச்சத்தை எதிர்கொண்டுள்ளன.
இதற்கிடையில், ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஈரானின் லாரக் தீவில் இரண்டு ஏவுகணை ஏவுதளங்களை அமெரிக்க ராணுவம் தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜூலை மாதத்துக்குப் பிறகு ஈரான் பிரதேசத்தில் அமெரிக்கா நடத்தியதாக கூறப்படும் முதல் நேரடி தாக்குதல் இதுவாகும்.
அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை ஜோர்டானில் உள்ள இரண்டு அமெரிக்க விமானப்படை தளங்களை குறிவைத்து பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
ஒரு முன்னணி செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டிய தகவலின்படி, அஸ்ராக் பகுதியில் உள்ள முவாஃபக் சல்தி விமானப்படை தளம் மற்றும் கிங் ஹுசைன் விமானப்படை தளம் ஆகியவை தாக்குதலின் இலக்குகளாக இருந்ததாக IRGC தெரிவித்துள்ளது.
மேலும், ஹோர்முஸ் நீரிணை மீதான தனது கட்டுப்பாட்டை இந்த தாக்குதல்கள் எந்த வகையிலும் பலவீனப்படுத்தாது என்றும் IRGC எச்சரித்துள்ளது.
இன்னிலையில் ஹோர்முஸ் நீரிணை உலகின் முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதைகளில் ஒன்றாக இருப்பதால், இப்பகுதியில் அதிகரிக்கும் பதற்றம் சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.