அமெரிக்கா செல்லும் கனடிய பழங்குடியின மக்களுக்கு விசேட அறிவுறுத்தல்
அமெரிக்கா பயணம் மேற்கொள்ளும் கனடிய பழங்குடியினருக்கு, கனடிய மத்திய அரசு புதிய பயண அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
எல்லை கடக்கும் போது ‘Status Card’ மட்டும் போதுமானதாக இருக்காது; அதனுடன் செல்லுபடியாகும் கடவுச்சீட்டை எடுத்துச்செல்லுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
நிலம் அல்லது நீர்வழியாக கனடா–அமெரிக்க எல்லையை கடக்கும் போது ‘Secure Certificate of Indian Status’ பயன்படுத்த “முடியும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

கனடிய அரசாங்கம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ள புதுப்பிப்பின் படி இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அந்த அட்டையை ஏற்க வேண்டுமா என்பது முழுமையாக அமெரிக்க அதிகாரிகளின் விருப்பத் தீர்மானம் (discretion) எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், Status Card அல்லது Secure Status Card ஆகியவை விமானப் பயணத்திற்கான செல்லுபடியாகும் பயண ஆவணங்களாக ஏற்கப்படமாட்டாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
எனவே, எல்லை கடக்கும் அனைவரும் இயந்திரம் வாசிக்கக்கூடிய (machine-readable) Secure Status Card உடன் செல்லுபடியாகும் கடவுச்சீட்டை எடுத்துச் செல்ல வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
“முன்னதாக Secure Status Card மட்டும் கொண்டு எல்லையை கடந்திருக்கலாம்; ஆனால் இப்போது கனடா வெளியே பயணம் செய்யும் போது கடவுச்சீட்டு எடுத்துச்செல்ல வலியுறுத்தப்படுகிறது” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.