லண்டன் பேருந்தில் பயணிகளை மது போத்தலால் தாக்கிய பெண்கள்!
தெற்கு லண்டனில் நள்ளிரவில் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து ஒன்றில் ஏறிய 4 பெண்கள் அங்கிருந்த பயணிகள் இருவரை மது போத்தலால் சரமாரியாக தாக்கிவிட்டு மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் குறித்த 4 இளம்பெண்கள் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள பொலிசார், தற்போது பொதுமக்கள் உதவியை நாடியுள்ளனர்.
பெண்களால் கொடூர தாக்குதலுக்கு இலக்கான ஆண் மற்றும் பெண் பயணிகள் இருவரும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெண் பயணி ஒருவரை போத்தலால் சரமாரிய தாக்கிய அந்த பெண்கள், பாதிக்கப்பட்ட பெண்ணின் அருகாமையில் அமர்ந்திருந்த ஆண் ஒருவரை ஊன்றுகோலால் சரமாரியாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
தாக்குதலில் , தலையில் காயம்பட்ட அந்த நபர் மருத்துவ சிகிச்சையை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது. 2022 ஓகஸ்ட் 28 ஆம் திகதி, தடம் எண் 250 ஸ்ட்ரீதம் பகுதியில் இருந்து க்ராய்டன் வரை செல்லக்கூடிய பேருந்தில் நடந்துள்ளது.
தாக்குதலை அடுத்து, அந்த 4 பெண்களும் பேருந்தில் இருந்து உடனடியாக வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.
தற்போது அந்த பெண்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள பொலிசார், பொதுமக்களில் எவரேனும் இந்த பெண்களை அடையாளம் காண தகவல் அளிக்க முன்வருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.