லண்டனில் பட்டப்பகலில் இளம் பெண் மீது சரமாரி கத்திக்குத்து; தமிழ் இளைஞர் கைது
லண்டனில் பட்டப்பகலில் இளம் பெண் ஒருவர் மீது, தமிழ் சரமாரியாக கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் கடந்த 25 ஆம் திகதி பிற்பகல் 2.20 மணியளவில் லண்டன் – ஈஸ்ட்ஹாம் பகுதியில் உள்ள ஹைதராபாத் வாலா (Hyderabad Wala) எனப்படும் தென்னிந்திய உணவகம் ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில், கேரளாவை சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உணவகத்திற்கு வந்த இளைஞன் ஒருவர் அங்கு பணியாற்றிய பெண்ணின் கையை பிடித்து இழுத்து அவருடன் சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென கத்தியை எடுத்து அப் பெண்ணை குத்த ஆரம்பித்துள்ளார்.
இந்த திடீர் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த உணவகத்தில் இருந்தவர்கள் அந்த பெண்ணை காப்பற்ற முயற்சித்த போது அவர் கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். பல முறை கத்திக்குத்துக்கு காயங்களுக்குள்ளான பெண் கீழே விழுந்தபோதும் விடாமல் அந்த இளைஞன் கத்தியால் குத்திவிட்டு சம்பவ இடத்தை விட்டு தப்பியோடியுள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் காயமடைந்த பெண்ணை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் இடம்பெற்ற பகுதி ஆசிய மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கும் இடம் என கூறப்படுகின்றது.
தாக்குதலுக்குள்ளான பெண் 30 வயதுடைய மலையாளி என தெரியவந்துள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.