புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 350 மில்லியன் பவுண்டுகள் நிதி: Fifa அமைப்புக்கு நெருக்கடி
கட்டாரில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் Fifa அமைப்பு 350 மில்லியன் பவுண்டுகள் நிதியை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மனித உரிமை மீறல்களை எதிர்கொண்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் இந்த தொகை ஒதுக்கப்பட வேண்டும் என ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரியுள்ளது.
குறித்த கோரிக்கையை Fifa தலைவர் Gianni Infantino இடம் ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் முன்வைத்துள்ளது.
Fifa தலைவருக்கு அளித்த கடிதத்தில் அனைத்து தொழிலாளர்களுக்கும் இழப்பீடு வழங்கப்படும் வரை, போட்டியை உண்மையாக கொண்டாட முடியாது என ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் குறிப்பிட்டுள்ளது.
கட்டார் கால்பந்து உலகக் கிண்ணம் தொடருக்கான கட்டுமானப் பணிகளுக்காக இலங்கை, இந்தியா உட்பட பல நாடுகளில் இருந்து சுமார் 30,000 புலம்பெயர் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த உலகக் கிண்ணம் விழாவினை சாத்தியமாக்குவதற்காக ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வஞ்சிக்கப்பட்டதாகவும் பலர் பரிதாபமாக இறந்துள்ளனர் எனவும் ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் சுட்டிக்காட்டியுள்ளது.