கார் மீது துப்பாக்கிச்சூடு; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இம்ரான்கான் 2 ஆவது மனைவி!
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் இரண்டாவது மனைவி ரீஹம் கான் சென்ற கார்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இம்ரான் கானுக்கும் ரீஹம் கானுக்கும் 2014-ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில் ,
அடுத்த ஆண்டே (2015) ரீஹம் கானும் இம்ரான்கானும் விவாகரத்து செய்துகொண்டனர். அதன்பின்னர் இம்ரான் கானை ரீஹன் கான் 2014-ல் திருமணம் செய்து 2015-ல் விவாகரத்து செய்தார்.
இந்நிலையில், பத்திரிக்கையாளரான ரீஹன் கான் நேற்று தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு காரில் வீடு திரும்பிய போது துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
இதில், அதிர்ஷ்டவசமாக ரீஹன் கானுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகின்றது. பைக்கில் வந்த இருவர் ரீஹனின் காரை இடைமறிந்த அவர்களை துப்பாக்கிமுனையில் காரை சிறைபிடித்த பின்னர் சிறிது நேரம் கழித்து துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த இருவரும் பைக்கில் தப்பிச்சென்றதாகவும் கூறப்படுகின்றது.
இந்த தாக்குதலையடுத்து ரீஹம் கான் தனது முன்னாள் கணவரும் பாகிஸ்தான் பிரதமருமான இம்ரான் கானை கடுமையாக சாடியுள்ளார்.
இது தொடர்பாக ரீஹம் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
எனது உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பியபோது எனது கார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. பைக்கில் வந்த இருவர் எனது காரை துப்பாக்கி முனையில் இடைமறித்தனர். நான் இப்போது தான் வேறு காருக்கு மாறியுள்ளேன்.
எனது தனிப்பாதுகாவலரும், டிரைவரும் அந்த காரில் இருந்தனர். இது தான் இம்ரான்கானின் புதிய பாகிஸ்தானா? கோழைகள், குண்டர்கள் மற்றும் பேராசைக்காரர்கள் நிறைந்த நாட்டிற்கு வரவேற்கிறோம் என அவர் பதிவிட்டுள்ளார்.