இலங்கையில் பொது மக்கள்மீது துப்பாக்கிச் சூடு ; அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகள் கண்டனம்!
இலங்கையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்மீது பொலிஸார் துப்பிக்கி பிரயோகம் மேற்கொண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இச்சமபவத்திற்கு ஐநா கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்கா, கனடா , உள்ளிட்ட நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன .
இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு என்பன கிடைக்காமல் மக்கள் திண்டாடுகிறார்கள். அத்தியாவசிய பொருட்களுக்காக பல மணி நேரம் வரிசையில் நிற்க வேண்டி இருக்கிறது. மின்சார தட்டுப்பாடு காரணமாக நீண்ட நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது.
உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதனையடுத்து இலங்கை ஜனாதிபதி, கோட்டாபவயை பதவி விலக்கோரி, கடந்த 12 நாட்களாக பொதுமக்கள் ஒருவாரத்திற்கும் மேலாக தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில் கேகாலை மாவட்டம் ரம்புக்கன பகுதியில் இலங்கை அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானதுடன் மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர். இந்த நிலையில், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக பொலிசார் விரிவான அறிக்கை அளிக்க இலங்கை மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு ஐநா கண்டனம் தெரிவித்துள்ளதுடன் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன .