தொண்டைக்குள் புகுந்து சிக்கிய உயிருள்ள மீன்: மரணத்தை நேரில் கண்ட மீனவர்
தாய்லாந்தில் படகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர் ஒருவரின் வாய்க்குள் உயிருள்ள மீன் ஒன்று புகுந்து மூச்சுக்குழாயில் சிக்கிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஏரியில் தூண்டிலால் மீன் பிடித்துக்கொண்டிருந்துள்ளார் அந்த மீனவர். அப்போது திடீரென்று அனபாஸ் மீன் ஒன்று தண்ணீரில் இருந்து குதித்து, அந்த மீனவரின் வாய்க்குள் புகுந்து தொண்டைக்குழியில் சிக்கியுள்ளது.
உயிருடன் மீன் தொண்டைக்குள் சிக்கியதால் மூச்சுவிட முடியாமல் அவதிப்பட்ட அவர் உடனடியாக Phatthalung பிராந்திய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
மே 22ம் திகதி நடந்த இச்சம்பவத்தை மருத்துவர்கள் முதலில் நம்பவில்லை என்றே கூறப்படுகிறது. தொடர்ந்து ஸ்கேன் மூலம் அந்த மீனவரின் தொண்டைக்குள் உயிருடன் மீன் ஒன்று சிக்கியிருப்பதை உறுதி செய்துள்ளனர்.
இதனையடுத்து மருத்துவர்கள் இருவர் ஒரு மணி நேரம் முயற்சி செய்து, ஐந்து அங்குல மீனை வெளியே எடுத்துள்ளனர். இதனால் அந்த மீனவர் உயிர் தப்பியதாக மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொண்டையை பிடித்தபடி அந்த மீனவர் உயிருக்கு போராடுவதை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள், அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.
அந்த மீனவர் தற்போது குணமடைந்து வருவதாகவும் ஆபத்து கட்டத்தை கடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.