2025ல் பயன்பாட்டுக்கு வரும் பறக்கும் டாக்ஸி
2025ம் ஆண்டில் பறக்கும் டாக்ஸியை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக பிரிட்டனின் வெர்டிகல் ஏரோஸ்பேஸ் நிறுவனம்.
இதன் தலைமைச் செயல் அதிகாரி ஸ்டீபன் ஃபிட்ஸ்பேட்ரிக் கூறுகையில், "அமெரிக்காவின் பிளான்க் செக் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், 2025ல் பறக்கும் டாக்ஸி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் எனவும் தெரிவித்துள்ளார்.
சுமார் 4 பேரை ஏற்றிச் செல்லும் இந்த டாக்ஸியை தயாரிக்க, ஏவவான், ஹனிவெல், ரோல்ஸ்ராய்ஸ் மற்றும் மைக்ரோசாஃப்டின் எம்12 ஆகியன முதலீடு செய்ய முன்வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரியவந்துள்ளன.
மேலும் விமானத்தை இயக்குவதற்கான வழிமுறைகள் குறித்து ஹீத்ரு விமான நிலையத்துடன் ஆலோசனையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.