பிரான்ஸ் மக்களுக்கு உணவுத் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!
பிரான்ஸில் பல்வேறு சுப்பர் மார்க்கெட்களில் விற்பனை செய்யப்படும் குழந்தை பால் போத்தல் உள்ளிட்ட முக்கிய பல உணவு தயாரிப்புகள் மீளக்கோரப்பட்டுள்ளன.
மனித நுகர்வுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்ற அச்சம் காரணமாக இந்த உணவு பொருட்களை மீளக்கோர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, லிஸ்டீரியா அபாயம் காரணமாக பதப்படுத்தப்பட்ட சால்மன் மீனை மீள ஒப்படைக்குமாறு Leclerc சுப்பர் மார்க்கெட் அறிவித்துள்ளது.
இந்த மீன் நோர்வேயில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு பிரான்ஸ் முழுவதும் விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த சால்மன் மீனை சாப்பிட வேண்டாம் எனவும் அதனை மீள ஒப்படைக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அதற்கான பணத்தை பெற்றுக் கொள்ள முடியும். இதேவேளை, ஒசோன் Auchan, Carrefour, Casino, Intermarché, Leclerc ஆகிய அனைத்தும் சுப்பர் மார்க்கெட்களும் ஜூலை மாதம் 22 முதல் விற்கப்பட்ட கCandia Baby Junior 4 குழந்தை பால் போத்தல்களை மீளக்கோரியுள்ளது.
போத்தலில் காற்று புகுதல் தொடர்பில் பிரச்சினைகள் உள்ளதென கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை மீளக்கோர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Carrefour, Monoprix, Franprix மற்றும் Intermarché ஆகிய நாடு முழுவதும் உள்ள சுப்பர் மார்ககெட்களில் விற்பனை செய்யப்பட்ட eclairs சொக்லேட்களை மீள ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. செப்டம்பர் 13 மற்றும் செப்டம்பர் 24ஆம் திகதிகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியல் இவை விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலோகம் அல்லது பிளாஸ்டிக் போன்றவைகள் அதில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவற்றினை மீள ஒப்படைக்குமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மீளக்கோரப்பட்டவைகள் அனைத்தும் உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கொள்வனவு செய்தவர்கள் அதனை அந்தந்த இடங்களில் ஒப்படைத்து பணத்தை மீளப்பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.