ஒன்டாரியோவில் அதிவேக நெடுஞ்சாலைகளுக்கான கட்டணங்கள் நீக்கம்
ஒன்றாரியோ மாகாணத்தின் அதிவேக நெடுஞ்சாலைகளுக்கான கட்டணங்கள் நீக்கப்பட்டுள்ளன. இறுதியாக 407 கிழக்கு நெடுஞ்சாலையில் பயணிப்பதற்கான கட்டணம் நீக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த கட்டண நீக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாகாணத்திற்கு சொந்தமான பகுதி முழுவதிலும் கட்டணம் (தொடர்வழி பயணக் கட்டணம்) அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஒன்டாரியோ முதல்வர் டக் ஃபோர்ட் தனது முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றை நிறைவேற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக்கரிஙில் உள்ள ப்ராக் சாலை முதல் கிளாரிங்டனில் உள்ள நெடுஞ்சாலை 35/115 வரை உள்ள பிரிவில், இனி பயணிகள் எந்தவொரு கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் டக் ஃபோர்ட் அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில் கட்டண நீக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாகாண போக்குவரத்துத் துறை அமைச்சர் ப்ரப்மீத் சர்காரியா தெரிவித்துள்ளார்.
“முந்தைய ஆட்சி காலங்களில் அமல்படுத்தப்பட்ட கட்டண நீக்கங்களை முற்றிலும் நீக்கும் பணியில் இது இறுதி படி என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 407 நெடுஞ்சாலைப் பகுதிகளில் டோல்கள் தொடரும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
ஒன்டாரியோ மாகாணத்திற்கு சொந்தமான நெடுஞ்சாலைகளில் இருந்து அனைத்து கட்டணங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டண நீக்கத்தின் ஊடாக நாள்தோறும் பயணம் செய்யும் பயணிகள் ஓராண்டுக்கு 7200 டொலர்கள் வரையில் சேமிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.