அமெரிக்கா வரும் விமான பயணிகளுக்கு இனி இது கட்டாயம்
கனேடியர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் இனி பயணத்திற்கு ஒருநாள் முன்னர் கொரோனா சோதனை முன்னெடுத்துவிட்டு அமெரிக்கா செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதியானது அடுத்த வார தொடக்கத்தில் இருந்து அமுலுக்கு வரும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் தற்போது பயணத்திற்கும் 72 மணி நேரம் முன்பு கொரோனா சோதனை மேற்கொண்டால் போதும் என்ற விதியை பைடன் நிர்வாகம் நீக்கியுள்ளது.
புதிய ஓமிக்ரான் மாறுபாடு காரணமாகவே, தற்போது இந்த மாற்றத்தை அமெரிக்கா நிர்வாகம் கொண்டுவந்துள்ளது.
விமான பயணிகள் தொடர்பிலே இந்த புதிய விதியை அறிவித்துள்ளனர். ஆனால் நில எல்லைகளை கடந்து அமெரிக்காவுக்குள் செல்லும் பயணிகளுக்கும் இது பொருந்துமா என குறிப்பிடப்படவில்லை.
கனடாவை பொறுத்தமட்டில், முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட அமெரிக்க மக்களுக்கு செப்டம்பரில் இருந்தே நாட்டுக்குள் அனுமதி அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.