மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன்
முன்னாள் அமெரிக்கா அதிபர் பில் கிளிண்டன் தொற்று நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பில் கிளிண்டன் அவர்கள் கடந்த செவ்வாய் மாலை அன்று கலிபோர்னியாவின் இர்வின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது மருத்துவர்கள் வெளியிட்ட அறிக்கையில், கிளின்டன் மிகவும் வேகமாக குணமடைந்து வருவதாகவும். கடந்த இரு தினங்களில் அவருக்கு அளிக்கப்பட்டு வந்த சிகிச்சையில் அவருக்கு னாய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அவர் விரைவில் நலமடைந்து வீட்டிற்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கிறோம் என்று மருத்துவர்கள் தங்களது அறிக்கையில் கூறியுள்ளனர்.