கனடாவில் சொந்த மகனால் தாயாருக்கு நேர்ந்த துயரம்: புகைப்படம் வெளியிட்ட பொலிசார்
கனடாவில் நார்த் யார்க் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் 67 வயதுப் பெண் சொந்த மகனால் கொல்லப்பட்ட சம்பவத்தில் முக்கிய தகவல்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
சனிக்கிழமை இரவு குறித்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இதனையடுத்து ஷெப்பர்ட் அவென்யூ வெஸ்ட் மற்றும் ஜேன் தெருவுக்கு அருகில் நார்த்ஓவர் தெருவில் அமைந்துள்ள குடியிருப்புக்கு பொலிசார் அழைக்கப்பட்டனர்.
இதனையடுத்து சம்பவப் பகுதிக்கு விரைந்த பொலிசார் Vincenza Galloro என்ற 67 வயதான பெண்மணியை உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்டுள்ளனர்.
ஆனால் அவசர மருத்துவ உதவிக்குழுவினரால் அவர் இறந்ததாக பின்னர் அறிவிக்கப்பட்டனர்.
இந்த விவகாரத்தில் குறித்த பெண்ணின் சொந்த மகணை சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார் கைது செய்துள்ளனர்.
அவர் மீது கொலை வழக்கும் பதியப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.