ஐரோப்பிய நாடொன்றில் அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி போட்ட மேலும் நால்வர் உயிரிழப்பு!
பிரான்ஸில் அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி போட்டுக்கொண்ட மேலும் நால்வர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 2ஆம் திகதியில் இருந்து ஏப்ரல் 8ஆம் திகதிக்குள் இந்த மேலதிக நான்கு மரணங்களும் சம்பவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
அதன்படி பிரான்ஸில் அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி செலுத்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது.
அதோடு , இதுவரை 23 பேருக்கு இந்த தடுப்பூசியினால் பக்கவிளைவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட நான்காவது நாடாக விளங்கும் பிரான்ஸில், இதுவரை 5,224,321பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 100,404பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.