ஒன்றாரியோவில் பயங்கர விபத்து; 4 பேர் பலி
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் இடம்பெற்ற பயங்கர விபத்துச் சம்பவத்தில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஒன்றாரியோவின் பீட்டர்ப்ரோவின் டயமன்ட் லைன் அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து இடம்பெற்றுள்ளது.
இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் பெயர்கள் மற்றும் வயது விபரங்கள் என்பன வெளியிடப்படவில்லை.
என்ன காரணத்தினால் விபத்து இடம்பெற்றது என்பது பற்றிய விபரங்களையும் பொலிஸார் வெளியிடவில்லை.
விபத்து காரணமாக அதிவேக நெடுஞ்சாலையின் குறித்த பகுதி மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்துச் சம்பவம் பற்றிய விபரங்கள் ஏதேனும் இருந்தால் அறிவிக்குமாறு ஒன்றாரியோ பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.