நயகரா பகுதியில் கோஷ்டி மோதல்; 4 பேர் மீது கத்தி குத்து தாக்குதல்
கனடாவின் நயகராக பகுதியில் கோஷ்டி மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த மோதல் சம்பவத்தில் நான்கு பேர் கத்தி குத்துக்கு இலக்காகியுள்ளனர்.
. நயகராவின் சென் கெதரீன்ஸ் பகுதியில் இந்த கத்தி குத்து தாக்குதல் சம்பவம் பதிவாகியுள்ளது.
சென் போல்ஸ் மற்றும் ஜேம்ஸ் வீதிகளுக்கு அருகாமையில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக நயகராக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடுகின்றனர்.
இந்த மோதல் சம்பவங்களினால் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தல்களும் கிடையாது என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைக்கப் பெற்றால் அது குறித்து பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.