பிரான்ஸில் ஒரே நாளில் 4 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு!
பிரான்ஸில் கடந்த 24 மணித்தியாலத்தில் 4 இலட்சத்து 851 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில் 233 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
இதையடுத்து பிரான்ஸில் 1 கோடியே 60 இலட்சத்து 1 ஆயிரத்து 498 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1 இலட்சத்து 28 ஆயிரத்து 347பேர் மரணமடைந்திருப்பதாக தெரிவந்துள்ளது.
பிரான்ஸில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 58 இலட்சத்து 9 ஆயிரத்து 339 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு 3,881 பேர் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பிரான்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் 2 இலட்சத்து 18 ஆயிரத்து 881 பேர் தொற்றிலிருந்து மீண்ட நிலையில், இதுவரையில் 1 கோடியே 63 ஆயிரத்து 812 பேர் மொத்தமாக குணமடைந்துள்ளனர்.