பிரான்ஸில் அடுத்த ஆண்டு நடக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக பாரிஸ் மேயர் அறிவிப்பு
பிரான்ஸில் அடுத்த ஆண்டு நடக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக பாரிஸ் மேயர் Anne Hidalgo அறிவித்துள்ளார்.
சோஸியலிஸ்ட் கட்சி சார்பாக போட்டியிடும் 62 வயதாகும் Anne Hidalgo, சுற்றுசூழல் மாசு, சமூக பிரச்சனைகளை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். தேர்தலில் போட்டியிடுவது குறித்து அதிபர் இமானுவேல் மாக்ரான் இன்னும் உறுதி செய்யாத நிலையில், அவர் இராண்டாம் முறை போட்டியிடுவார் என்று எதிபார்க்கப்படுகிறது.
இன்னொரு அதிபர் வேட்பாளரான National Rally கட்சி தலைவர் Le Pen, பிரான்ஸில் வெளிநாட்டு மக்கள் குடியேற எதிர்ப்பு, இஸ்லாமிய அடிப்படைவாத எதிர்ப்பு போன்ற கொள்கைகளை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்து வருகிறார்.