நெருக்கடியில் சிக்கிய பிரான்ஸ்; எச்சரித்த சுப்பர் மார்கெட்!
பிரான்ஸில் சில உணவுப் பொருட்களின் விலை எதிர்பாராத அதிகரிப்பை சந்திக்கவுள்ளதென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டில் இரட்டை இலக்கங்களின் பொருட்களின் விலை அதிகரிப்பை காண முடியும் என E.Leclerc சுப்பர் மார்க்கெட்டின் தலைவர் எச்சரித்துள்ளார்.
பணவீக்கத்தின் வீதம் ஒக்டோபர் மாதத்தில் 6.2 சதவீதம் அதிகரித்துள்ளமை ஒப்பிட்டு தாம் இந்த எச்சரிக்கை விடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்க்காணலில் உரையாற்றிய லுக்லேர் சுப்பர் மார்க்கெட்டின் தலைவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் நெருக்கடியின் சுனாமியின் நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். பணவீக்கம் தற்காலிகமானது அல்ல. கிறிஸ்மஸ் நேரத்தில் வரும் நிலைகள் மிக கடினமானவைகள். நாங்கள் இரட்டை இலக்க பணவீக்கத்தை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கின்றோம்.
இது பொருட்களின் விலையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். பொருட்களின் விலைகளை மறுமதிப்பீடு செய்ய விரும்பும் சில பொருட்கள் பற்றி தனக்கு ஏற்கனவே தெரியும்.
விலங்குகளின் உணவுகள் ஆண்டுக்கு 40 சதவீதம் உயரும் எனவும், ஊறுகாய் மற்றும் ஜேம்களின் விலைகள் 20 சதவீதமும், பால் பொருட்கள் 16 சதவீதமும், எண்ணெய்கள், மசாலாப் பொருட்கள் மற்றும் சுவையூட்டும் பொருட்கள் 15.08 சதவீதமும், புதிய தயாரிப்புகள் மற்றும் சுவையான பொருட்கள் 13 சதவீதமும், கோழி போன்றவற்றின் உணவு தயாரிப்புகள் 13 சதவீதமும், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்களுக்கு 11 சதவீதமும், மாவுச்சத்து கொண்ட மற்றும் மாவினால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் 10.83 சதவீதமும், கோப்பி 10 சதவீதமும் விலை உயரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய உணவுப் பொருட்களின் விலைகள் தற்போது ஆண்டுக்கு 17 சதவீதம் அதிகரித்து வருகிறது. உணவுப் பொருட்களுக்கு வெளியேயும் அனைத்துப் பொருட்களும் சில உயர்வைக் காணும்.
அதிகரித்து வரும் எரிசக்தி விலை விவசாயம் மற்றும் உணவு உற்பத்தித் தொழில்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது கூடுதல் செலவினங்களை நுகர்வோருக்கு ஏற்படுத்தும்.
நுகர்வோர் ஏற்கனவே தங்கள் வயிற்றை கட்டுப்படுத்துவதற்கு ஆரம்பித்துள்ளதனை நாங்கள் அவதானித்துள்ளோம். இந்த நிலை மேலும் அதிகரிக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.