பிரான்சில் வேகமெடுக்கும் குரங்கம்மை தொற்று: சுகாதாரத்துறை அறிவிப்பு
பிரான்சில் குரங்கம்மை தொற்று எண்ணிக்கை ஐம்பதை தாண்டியுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
கடந்த புதன்கிழமை பகல் 33 பேருக்கு குரங்கம்மை தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், இன்று சனிக்கிழமை பகல் 51 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக Santé publique France அறிவித்துள்ளது.
இதில், 36 தொற்றாளர்கள் Ile-de-France மாகாணத்துக்குள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். Occitanie பகுதியில் 6 பேர்களுக்கும், Auvergne-Rhône-Alpes பகுதியில் இருவருக்கும், Normandy பகுதியில் இருவருக்கும், Hauts-de-France மற்றும் Centre-Val de Loire மாகாணங்களில் தலா ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே உலக நாடுகளில் இதுவரை 700 பேர்களுக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 22 என அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, ஸ்பெயின் நாட்டில் 208 பேர்களுக்கும் இங்கிலாந்தில் 206 பேர்களுக்கும் போர்த்துகல் நாட்டில் 138 பேர்களுக்கும் குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.