வெளிநாட்டவர்களை கண்கானிக்கும் பிரான்ஸ்!
பிரான்ஸில் உள்ள அனைத்து வெளிநாட்டவர்களையும் கண்கானிக்குமாறு உள்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனே குற்றமிழைத்த வெளிநாட்டவர்களுக்கு சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த போவதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது குற்றமிழைக்காத அனைவரையும் கண்கானிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கான சுற்றரிக்கை ஒன்றை அமைச்சரவையில் நேற்று முன்தினம் சமர்ப்பித்துவிட்டதாகவும் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டாமன்னா (Gérald Darmanin) குறப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டவர்கள் தொடர்பான சட்டத்தை கடுமையாக்குவதனை அவர் தனது முன்னுரிமைகளில் ஒன்றாக்கியுள்ளார். ஒரு ஒழுங்கற்ற சூழ்நிலையில் அனைத்து வெளிநாட்டினருக்கும் பிரான்ஸ் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான சட்டங்களை கடுமையாக்குமாறு அமைச்சர் தலைவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
2020 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் 3,500 வெளிநாட்டினர் பொது ஒழுங்கிற்கு அச்சுறுத்தலாக உள்ளார்கள் என குற்றச்சாட்டின் கீழ் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குற்றமிழைத்த வெளிநாட்டினரை போன்று குற்றமற்ற வெளிநாட்டவர்களை கண்காணிக்க வேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, கண்காணிக்கப் பயன்படுத்தப்படும் “பிரான்ஸ் நாட்டை விட்டு வெளியேறும்” சட்டத்தினை அனைத்து வெளிநாட்டினருக்கும் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று உள்துறை அமைச்சர் தனது சுற்றரிக்கை அறிவுறுத்தலில் குறிப்பிட்டுள்ளார்.
குற்றம் செய்தால் முதலில் குடியிருப்பு அனுமதி மறுப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு அதற்கு பின்னர் நாட்டை விட்டு வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இந்த நடவடிக்கையை அமுல்படுத்த வேண்டும் என்றால் உடனடியாக வெளிநாட்டவர்கள் தொடர்பான அனைத்து தரவுகளை சரிப்பார்த்து வைத்துக் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, வெளிநாட்டவர்களின் உறுதி செய்ய கூடிய விலாசங்கள் உள்ளதா என்பதனையும் சரிப்பார்க்க வேண்டிய தேவை உள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.