உக்ரைனுக்கு புறப்படும் பிரான்ஸ் அதிபர்
பிரான்ஸ் அதிபர் மக்ரோன் (Emmanuel Macron) விரைவில் உக்ரைனுக்கு செல்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு நூறு நாள்களைத் தாண்டி நீடித்துவரும் நிலையில் கிழக்கு டொன்பாஸ் பிராந்தியத்தின் முழுப் பகுதியையும் ரஷ்யப் படைகள் கைப்பற்றியுள்ளன.
போரில் ஒரு கணிசமான வெற்றி தங்களுக்குக் கிடைத்திருப்பதாக மொஸ்கோ கூறுகிறது. ஆயினும் அங்குள்ள Severodonetsk என்னும் கேந்திர முக்கியத்துவம் மிக்க நகரில் கடும் சண்டை நீடித்துவருகிறது.
அதேவேளை நாட்டின் இருபது சதவீத நிலப்பகுதியை ரஷ்யா ஆக்கிரமித்துவிட்டதாக உக்ரைன் தெரிவித்த நிலையில் இறுதி வெற்றி தங்களுடையதே என்று உக்ரைன் அதிபர் ஷெலான்ஸ்கி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் பிரான்ஸ் அதிபர் மக்ரோன் (Emmanuel Macron) விரைவில் தலைநகர்கீவுக்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் உக்ரைனுக்கு செல்லும் தனது பயணத்தை மறுக்க முடியாது என்று அவர் (Emmanuel Macron) நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
அதேவேளை உலகத் தலைவர்கள் பலரும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளும் ஏற்கனவே அங்கு சென்றுதிரும்பியுள்ள நிலையில் மக்ரோனும் (Emmanuel Macron) உக்ரைன் விஜயம் செய்ய வேண்டும் என அவர் மீது அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன.