எரிபொருள் பவுசர் வெடித்ததில் 13 பேர் பலி!
கென்யாவில் எரிபொருள் பவுசர் ஒன்று வெடித்ததில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாடு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கென்யாவின் மேற்குப் பிரந்திய நகரான மலேங்காவுக்கு அருகில் நேற்று இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எரிபொருள் பவுசர் மற்றொரு வாகனத்துடன் மோதியதையடுத்து கவிழ்ந்தது. இதனையடுத்து பவுசரிலிருந்து கசிந்த பெற்றோலை சேகரிப்பதற்காக பெரும் எண்ணிக்கையானோர் திரண்டனர்.
இதன்போது திடீரென , பவுசர் வெடித்து தீப்பற்றியதாக பொலிஸ் அதிகாரி சார்ள்ஸ் சச்சா தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரழந்துள்ள நிலையில் மற்றொருவர் வைத்தியசாலையில் உயிரிழந்தார் எனவும் பொலிஸ் அதிகாரி கூறியுள்ளார்.