உக்ரைன் அதிபருடன் ஜி 7 நாடுகளின் தலைவர்கள் இன்று பேச்சுவார்த்தை!
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி(Volodymyr Zelenskyy)யுடன் காணொலி வாயிலாக ஜி 7 நாடுகளின் தலைவர்கள் இன்று கலந்துரையாடுகின்றனர்.
இதனை அமெரிக்க வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் உறுதி செய்துள்ளது.
ரஷ்யா, உக்ரைன் இடையிலான யுத்தம் முடிவே இல்லாமல் நீண்டு வரும் நிலையில் அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, கனடா , ஜப்பான், இத்தாலி, மற்றும் பிரிட்டன் ஆகிய ஏழு நாடுகளின் தலைவர்களும் ஜெலன்ஸ்கி(Volodymyr Zelenskyy)யுடன் மூன்றாவது முறையாக காணொலியில் பேச்சு நடத்த உள்ளனர்.
போர் நிலவரம் குறித்து விவரித்து மேற்கத்திய நாடுகளிடமிருந்து ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy)கோருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ரஷ்யா மீது கூடுதலான தடைகளை விதிப்பது குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.