கனேடிய மாகாணம் ஒன்றில் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பியவர்களுக்கு எதிர்பாராத இழப்பு
கனடாவில், தெற்கு ஆல்பர்ட்டாவில் தங்கள் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பிய சிலர் எதிர்பாராத பிரச்சினை ஒன்றை சந்திக்க நேர்ந்துள்ளது. Langdon என்ற இடத்தில் அமைந்துள்ள Gas Plus என்ற எரிபொருள் நிரப்பு மையத்தில் எரிபொருள் நிரப்பியவர்களின் வாகன எஞ்சின்களில் கோளாறுகள் ஏற்பட்டுள்ளன.
சிலர் கோளாறுகளை சரி செய்ய 8,500 டொலர்கள் வரை செலவு செய்துள்ளார்கள். தொடர்ந்து பலரது வாகனங்களில் பிரச்சினை ஏற்படவே அவர்கள் எரிபொருள் நிரப்பு மையத்தை அணுகியுள்ளார்கள்.
அப்போதுதான் பிரச்சினைக்கான காரணம் தெரியவந்துள்ளது. அதாவது, எரிபொருள் நிரப்பு மையத்திலிருந்த பிரம்மாண்ட எரிபொருள் டேங்குகளில் தவறான எரிபொருள் நிரப்பப்பட்டுள்ளது.
பெட்ரோல் நிரப்பும் டேங்கில் டீசலும், டீசல் நிரப்பும் டேங்கில் பெட்ரோலும் நிரப்பப்பட்டுள்ளன. ஆக, பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு பெரும்பான்மை டீசலும், டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட வாகனங்களில் பெட்ரோலும் நிரப்பட்டதால் எஞ்சின்கள் பழுதடைந்துள்ளது தெரியவந்துள்ளது.
பொதுமக்களின் புகாரையடுத்து ஒவ்வொருவருக்காக இழப்பீடு வழங்க இருப்பதாக எரிபொருள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
என்றாலும், இழப்பீடு வர தாமதிப்பதையடுத்து சிலர் நீதிமன்றத்தை அணுக முடிவு செய்துள்ளனர்.