மக்கள் கூட்டத்தினிடையே இளைஞருக்கு ஏற்பட்ட துயரம்
தென்மேற்கு லண்டனில் அதிகாலையில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்மேற்கு லண்டனில் இன்று அதிகாலை 1.15 மணியளவில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. தகவல் அறிந்து விரைந்து சென்ற பொலிசார் துப்பாக்கி குண்டு பாய்ந்து ஆபத்தான நிலையில் இருந்த இளைஞரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.
ஆனால் மருத்துவமனையில் வைத்தே 18 வயதேயான அந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
பெருந்திரளான மக்கள் கூட்டத்தில் இளைஞரும் கலந்து கொண்டுள்ளார் எனவும், இந்த நிலையில்லேயே துப்பாக்கியால் குறித்த இளைஞர் சுடப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
விசாரணையின் துவக்க கட்டத்தில் இருப்பதால், மேலதிக தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாகவும், அதன் பின்னரே கைது நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் விசாரணை அதிகாரிகளுக்கு உதவ வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.