காஸா குழந்தைகளின் நிலை ; ஐ.நா. கூட்டத்தில் கண்ணீர் விட்ட பலஸ்தீனிய தூதர்

Sulokshi
Report this article
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கூட்டத்தில் இஸ்ரேல் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட காஸாவின் நிலையை எடுத்துரைக்கும் போது பலஸ்தீனிய தூதர், கதறி அழுதது உருக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இஸ்ரேல், காஸா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அங்கிருந்த மக்கள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்.
பல ஆயிரம் குழந்தைகள் உயிரிழக்க நேரிடும்
அண்மையில் வெளியான தகவலின்படி, உணவு மற்றும் மருந்துக்கு பற்றாக்குறை இருப்பதாகவும் உணவு வாகனங்கள் செல்வதற்கு இஸ்ரேல் அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.
உணவு வாகனங்கள் செல்லாவிட்டால், பல ஆயிரம் குழந்தைகள் உயிரிழக்க நேரிடும் என்றும் தகவல் வெளியானது. இந்த நிலையில், ஐ.நா.பாதுகாப்பு சபை கூட்டத்தில் பேசிய பலஸ்தீனிய தூதர் ரியாத் மன்சூர், காஸாவில் குண்டுவெடிப்பு, தீப்பிழம்பு, பசி, பட்டினி ஆகியவற்றின் நடுவே மக்கள் தவிப்பதாக தெரிவித்தார்.
இதன்போது மனம் உடைந்து கதறி அழுத அவர், தனக்கும் பேரக் குழந்தைகள் இருக்கிறார்கள் என்றும் காஸா குழந்தைகளின் நிலையை பார்க்க முடியவில்லை என்றும் கண்ணீருடன் தெரிவித்தார்.
மேலும் காஸாவின் குழந்தைகள் உணவின்றி, தண்னீர் இன்றி, வாழ்விடங்கள் இன்றி அண்டை நாடுகள் மற்றும் அகதிகள் முகாமிலும் வாழ்வதை பார்க்க முடியவில்லை என்றும் கவலையை வெளிப்படுத்தினார்.