சிரிய இராணுவஅதிகாரி தொடர்பில் ஜேர்மனி நீதிமன்றம் வரலாற்று தீர்ப்பு!

Germany People Syria Court History Prison Syrian military official
By Sulokshi Jan 14, 2022 12:56 PM GMT
Sulokshi

Sulokshi

Report

மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டமைக்காக சிரியா இராணுவ அதிகாரியொருவருக்கு ஜேர்மன் நீதிமன்றம் ஆயுள்தண்டனையை வழங்கியுள்ளது.

சிரியாவின் பூமியில் நரகம் என அழைக்கப்படும் சிறையில் 4000க்கும் அதிகமானவர்களை சித்திரவதை செய்த குற்றத்திற்காக அன்வர் ரஸ்லான் என்ற இராணுவ அதிகாரிக்கு ஜேர்மனி நீதிமன்றம் ஆயுள்தண்டனையை வழங்கியுள்ளது.

சிரியாவில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட சித்திரவதைகளிற்கு எதிரான முதலாவது வழக்கு இது ஆகும்.

ஜேர்மனியில் அரசியல் புகலிடம் கோரியிருந்த ரஸ்லான் 2019 இல் கைதுசெய்யப்பட்ட நிலையில் அவர் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிராகரித்திருந்ததுடன் கைதிகள் மோசமாக சித்திரவதை செய்யப்பட்டமைக்கும் தனக்கும் எந்த தொடர்புமில்லை என தெரிவித்திருந்தார்.

அத்துடன் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்களிற்கு உதவும் முயற்சியில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அவருக்கு எதிரான விசாரணை பல காரணங்களிற்காக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்பட்டது. சிரிய அரசாங்கத்தின் சித்திரவதைகளை விசாரணைக்கு உட்படுத்தியதில் அது முன்னர் ஒருபோதும் இடம்பெறாததாக காணப்பட்டது.

தங்கள் நாட்டிலிருந்து தப்பிவெளியேறிய ஆயிரக்கணக்கான சிரியர்கள் காரணமாகவே இது சாத்தியமானது. ஜேர்மனியில் வசிக்கும் 800.000 சிரிய மக்கள் அசாத்தினை எதிர்த்தவர்களிற்கு என்ன நடந்தது என் துயரமும் வலியும் வேதனையும் நிறைந்த கதைகளை கொண்டுவந்தனர்.

ஜேர்மனியின் நீதிதுறையினர் சர்வதேச நியாயாதிக்க எல்லையை பயன்படுத்தி நீதி வழங்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். சர்வதேச நியாயாதிக்க எல்லை ஒரு நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பாரிய அநீதிகள் குறித்து மற்றுமொரு நாட்டில் விசாரணைகளை மேற்கொள்ள அனுமதிக்கின்றது.

ரஸ்லானிற்கு எதிராக 58 கொலைக்குற்றச்சாட்டுகளும் பாலியல்வன்முறை மற்றும் தாக்குதல் குற்றச்சாட்டுகளும்2011 முதல2012 முதல் 4000 பேரை சித்திரவதை குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன.

அல் கட்டிப் சிறைச்சாலையிலிருந்து தப்பியவர்களிற்கும் சாட்சியங்களை அளித்தவர்களிற்கும் இந்த தீர்ப்பு மிகவும் முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.

இந்த தீர்ப்பின் மூலம் சிரியா அரசாங்கம் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டது என்பதை குற்றவியல் நீதிமன்றம் ஏற்றுக்கொணடுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US