மில்லியன் கணக்கான ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: ஜேர்மன் அரசு தாராளம்
ஜேர்மனியில் அரசு ஊழியர்களுக்கு கொரோனா கால ஊக்கத்தொகையாக 1300 யூரோ மற்றும் ஊதிய உயர்வை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
குறித்த ஊதிய உயர்வால் 3.5 மில்லியன் மாநில அளவிலான ஊழியர்களும் ஜேர்மன் அரசு ஊழியர்களும் பயனடைவார்கள். ஜேர்மனியில் அரசு மற்றும் மாநில அளவிலான ஊழியர்களுக்கு 2.8% ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு வரி இல்லாத ஊக்கத்தொகையாக 1,300 யூரோ ஒவ்வொரு அரசு ஊழியரும் பெறுவார்கள். சில மருத்துவ மற்றும் காப்பகங்களில் பணியாற்றும் ஊழியர்களும் பயிற்சி பெறும் நிலையில் உள்ளவர்களுக்கு 650 யூரோ ($735) வரியில்லா ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றன.
முன்னதாக தொழிற்சங்கங்கள் 5% ஊதிய உயர்வை கோரியிருந்தன. விலைவாசி உயர்வு மற்றும் கொரோனா நாட்களில் பணியாற்றுவதால் ஏற்பட்ட அதிகப்படியான மனச்சோர்வு உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டே 5% ஊதிய உயர்வு கோரப்பட்டது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஊதிய உயர்வு மற்றும் ஊக்கத்தொகையானது ஜேர்மனியின் அனைத்து மாகாணங்களுக்கும் பொருந்தும்.
மட்டுமின்றி, அரசு பொது மருத்துவமனைகள், பள்ளிகள், காவல்துறை, தீயணைப்பு சேவைகளில் பணிபுரியாற்றுவோர் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் அனைவரும் இதனால் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.