ஜேர்மனியில் ஒரே நாளில் 430 பேர் மரணம்! அச்சத்தில் மக்கள்
ஜேர்மனியில் கடந்த 24 மணித்தியாலத்தில் 62 ஆயிரத்து 955 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில் 430 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து ஜேர்மனியில் 73 இலட்சத்து 41 ஆயிரத்தை 980 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1இலட்சத்து 13 ஆயிரத்து 901 பேர் மரணமடைந்திருப்பதாக தெரிவந்துள்ளது.
ஜேர்மனியில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 6 இலட்சத்து 46 ஆயிரத்து 279 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், Covid-19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு 4 ஆயிரத்து 636 பேர் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஜேர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 49 ஆயிரத்து 900 பேர் தொற்றிலிருந்து மீண்ட நிலையில், இதுவரையில் 65 இலட்சத்து 81 ஆயிரத்து 800 பேர் மொத்தமாக குணமடைந்துள்ளனர்.