ஒரே மாதத்தில் இது இரண்டாவது சம்பவம்: நள்ளிரவில் பயங்கரம்
ஜேர்மனியின் ஹாம்பர்க் நகரில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை ஹாம்பர்க் பகுதியில் நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதாக உள்ளூர் பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நள்ளிரவுக்கு சற்று முன்பு பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததாகவும், அதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு 28 வாகனங்களில் பொலிஸார் விரைந்து சென்றதாகவும் கூறப்படுகிறது.
மேலும் ஹாம்பர்க் நகரில் அரங்கேறி இருக்கும் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் இந்த மாதத்தில் இரண்டாவது என தெரிவிக்கின்றனர்.
இந்த மாத தொடக்கத்தில், ஹாம்பர்க் நகரில் உள்ள யெகோவாவின் சாட்சிகள் தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
அதில் துப்பாக்கிதாரி என சந்தேகிக்கப்படும் நபர் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.