கனடாவில் 8 வயது மகளை கொன்று தற்கொலை செய்து கொண்ட தந்தை?
கனடாவில் 8 வயதான மகளை கொலை செய்து அந்தச் சிறுமியின் தந்தை படுகொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கனடாவின் டர்ஹம் வின்லோர்ட் பிளேஸ் பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற அவசர அழைப்பிற்கு அமைய சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்துள்ளனர்.
அதன் போது வீட்டில் இரண்டு சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். சம்பவத்தில் 8 வயதான சிறுமியும், 38 வயதான அந்தச் சிறுமியின் தந்தையும் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த இருவரதும் குடும்பத்தினரின் கோரிக்கைக்கு அமைய பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை.
சிறுமி கொலை செய்யப்பட்டு அவரது தந்தை தற்கொலை செய்திருக்கலாம் என தடயங்கள் மூலம் தென்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த மரணங்கள் தொடர்பில் வெளி நபர்களுக்கு தொடர்பு இருப்பதாக தெரியவில்லை ஏன டர்ஹம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பிலான ஏனைய விபரங்கள் எதனையும் பொலிஸார் வெளியிடவில்லை.