ஜெர்மனியில் யூரோ பயண சீட்டிற்காக காத்திருப்பவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!
யூரோ பயண சீட்டிற்காக காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.
49 யூரோ பயண சீட்டிற்கு ஜெர்மனி அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. ஜெர்மனியில் 49 யூரோ பயண சீட்டு எப்போது வரும் என மக்கள் காத்துக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் 5ஆம் மாதம் முதலாம் திகதி நடைமுறைக்கு வரவுள்ள டொஸ்லா டிக்கட் என்று செல்லப்படுகின்ற 49 யூரோ சீட்டிற்கு தமது அனுமதியை வழங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதில் ஜெர்மன் அரசாங்கமானது வருடம் ஒன்றுக்கு1.5 பில்லியன் யுரோக்களை முதலீடு செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது கோடைகாலத்தில் ஜெர்மனி முழுவதும் கிடைத்த 9 யூரோ டிக்கெட்டைப் பின்தொடர்ந்து இந்த டிக்கட் அமுல்படுத்தப்படவிருந்தது.
ஒரு மாதத்திற்கு 49 யூரோக்கள் செலவாகும் பொதுப் போக்குவரத்து அனுமதிச்சீட்டை அறிமுகப்படுத்த ஜேர்மனி விரும்புகிறது. இந்த பயணச்சீட்டு நாடு முழுவதும் செல்லுபடியாகும்.
முன்னதாக 9 யூரோ டிக்கெட் திட்டம் ஜேர்மனியில் மிகவும் வெற்றிகரமாக அமைந்தது. அதனை பின்பற்றி, அதிகாரிகள் நிதியுதவிக்கு உடன்பட்டால் இப்போது இந்த புதிய 49 யூரோ பயணச்சீட்டு அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
9 யூரோ டிக்கெட் இந்த கோடையில் மூன்று மாதங்களுக்கு வழங்கப்பட்டது, இது சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்திற்கு மாறுவதற்கும், பெட்ரோல் பயன்பாட்டைக் குறைப்பதற்கும் மற்றும் பணவீக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் உதவும் வகையில் அமுல்படுத்தப்பட்டது.
இந்த திட்டம் பல விதத்தில் பயணிகளை மிகவும் ஈர்த்தது. குறிப்பாக, ஜெர்மனியின் அனைத்து மாநில பேருந்து, ரயில் மற்றும் டிராம் நெட்வொர்க்குகளிலும் செல்லுபடியாகும் வகையில் அமைக்கப்பட்டது மக்களால் மிகவும் வரவேற்கப்பட்டது.
இந்த நிலையில் 49 யூரோ ரயில் டிக்கட் நடைமுறை மே மாதம் முதல் அமுல்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.