ஆப்கானில் பெரும் சோகம்; தொடரும் மீட்பு பணி
தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு, இடிபாடுகளில் இருந்து தப்பியவர்களை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானின் பாக்டிகா மாகாணத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 255 பேர் உயிரிழந்ததுடன் மற்றும் 155 பேர் காயமடைந்துள்ளதாக ஆப்கானிஸ்தானின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மாகாணத்தின் பர்மால், சிருக், நாகி மற்றும் கியான் மாவட்டங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பல வீடுகள் தரைமட்டமாகியுள்ளன ,
இடிபாடுகளுக்கு அடியில் இருந்து உடல்களை வெளியே எடுப்பதற்கான முயற்சிகள் இப்போது நடந்து வருகின்றதாக அதிகாரிகள் உள்ளூர் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கோஸ்ட் நகரிலிருந்து 44 கிலோமீற்றர் தொலைவில் 51 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த நடுக்கம் 500 கி.மீற்றருக்கு பரவி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவில் சுமார் 119 மில்லியன் மக்கள் உணர்ந்ததாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளது.