இஸ்ரேல்- பாலஸ்தீனம் மோதல்: கிரெட்டா தன்பெர்க் மீது கடுமையான விமர்சனம்
இஸ்ரேல்- பாலஸ்தீனம் மோதல் குறித்த கிரெட்டா துன்பெர்க்கின் டுவிட் ஒன்று கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
ஸ்வீடன் நாட்டை சேர்ந்தவர் 18 வயதான இளம்பெண் கிரேட்டா தன்பெர்க் (Greta Thunberg), காலநிலை ஆர்வலராக அறியப்படுகிறார்.
கிரெட்டா தன்பெர்க்கின் துணிச்சலான பேச்சம், உலகத் தலைவர்கள் மீதான விமர்சனமும் அவரை உலகப்புகழ்பெறச் செய்தது.
இந்நிலையில் இஸ்ரேலுக்கும் - பாலஸ்தீனத்துக்கும் கடுமையான மோதல் நடைபெற்று வரும் நிலையில், இவரது டுவிட் பல விமர்சனங்களை பெற்று வருகிறது.
அந்த டுவிட்டில், "தெளிவாக இருக்க வேண்டும்: நான் இஸ்ரேலுக்கோ பாலஸ்தீனத்துக்கோ "எதிராக" இல்லை. யாரிடமிருந்தும் அல்லது எந்தப் பகுதியிலிருந்தும் எழும் எந்தவொரு வன்முறை அல்லது அடக்குமுறைக்கு நான் எதிரானவள் என்று சொல்ல தேவையில்லை" என்று கூறி உள்ளார்.
இதைப்பார்த்த பலரும், அநீதி நடக்கும் போது குரல் கொடுக்கும் நீங்கள், தற்போது நடுநிலை வகிப்பது எந்த விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
To be crystal clear: I am not “against” Israel or Palestine. Needless to say I’m against any form of violence or oppression from anyone or any part. And again - it is devastating to follow the developments in Israel and Palestine.
— Greta Thunberg (@GretaThunberg) May 11, 2021