அமெரிக்காவில் மூன்று பகுதிகளில் நடந்த துப்பாக்கிச்சூடு! 10 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவில் மூன்று வெவ்வேறு பகுதிகளில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர்.
இவ்வாறான நிலையில், பிலடெல்பியா, டெக்சாஸ், வால்டிபொர், பொர்ட் ஒர்த் ஆகிய 4 நகரங்களில் திங்கட்கிழமை முதல் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 40 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
அமெரிக்க சுதந்திர தின விடுமுறை கொண்டாட்டங்களின் போது இந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களுக்கு அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.