டெக்சாஸ் மாகாணத்தில் உடனடியாக நிறுத்தப்பட்ட H-1B விசா
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கான எச்-1 பி விசா மனுக்களை உடனடியாக நிறுத்த அந்த மாகாண ஆளுநர் கிரேக் அபோட் உத்தரவிட்டுள்ளார்.
எச்- 1 பி விசா என்பது அமெரிக்காவின் தற்காலிக குடியுரிமை போன்றதாகும். வெளிநாடுகளில் உள்ள திறமையான பணியாளர்களை அமெரிக்காவுக்கு வரவழைத்து வேலை வாங்க இந்த விசா முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

விசா முறை
கடந்த 1990 முதல் இந்த விசா முறை நடைமுறையில் இருக்கிறது. எச்-1 பி விசாவுக்கு ஆண்டுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கான எச்-1 பி விசா மனுக்களை உடனடியாக நிறுத்த அந்த மாகாண ஆளுநர் கிரேக் அபோட் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவு வரும் 2027 மே மாதம் வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.