ஹமாஸ் குழு தலைவர்கள் வேட்டையாடப்படுவார்கள்; டிரம்ப் எச்சரிக்கை
ஹமாஸ் படையினர் இறக்க விரும்புகிறார்கள். அமைதியை நிலைநாட்ட எந்த ஆர்வமும் காட்டவில்லை என தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹமாஸ் குழுவின் தலைவர்கள் வேட்டையாடப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினருக்கு இடையே போர் நடந்து வரும் நிலையில் காசாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பாலஸ்தீனர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டுள்ளனர்.
ஹமாஸ்- இஸ்ரேல் போரை முடிவுக்கு கொண்டு வர தீவிர நடவடிக்கை
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்து, ஹமாஸ்- இஸ்ரேல் இடையே நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், அமெரிக்க ஆதரவுடன் கூடிய போர் நிறுத்த திட்டத்தை ஹமாஸ் நிராகரித்த நிலையில் இது குறித்து டொனால்ட் ட்ரம்ப் கருது தெரிவித்துள்ளார்.
இதில், ஹமாஸ் போராளிக் குழுவிற்கு அமைதியை நிலைநாட்ட எந்த ஆர்வமும் இல்லை எனவும் ஹமாஸ் உண்மையில் ஒப்பந்தம் செய்ய விரும்பவில்லை எனவும் அவர்கள் இறக்க விரும்புகிறார்கள் என்றும் தான் எண்ணுவதாகவும் கூறியுள்ளார்.
அனைத்து பிணைக்கைதிகளையும் விடுவித்த பின்னர் என்ன நடக்கும் என்று அவர்களுக்கு தெரியும் எனவும் இதனால் பிணைக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தங்களை ஹமாஸ் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை என கூறிய ட்ரம்ப் , ஹமாஸ் குழுவின் தலைவர்கள் வேட்டையாடப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளார்