பிரான்ஸ் மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்! அடுத்த மாதம் முதல் ஏற்படவுள்ள மாற்றம்
பிரான்ஸில் மே மாதம் முதலாம் திகதி முதல் குறைந்தபட்ச ஊதியம் அதிகரிக்கப்படவுள்ளதாக பிரான் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வருடம் நவம்பர் மாதம் முதல் பிரான்ஸில் அதிகரிக்கும் பணவீக்கத்தை கருத்திற் கொண்டு குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிக்கவுள்ளதாக தொழிலாளர் அமைச்சு அறிவித்துள்ளது.
அதற்கமைய மே மாதம் முதலாம் திகதி முதல் 2.65 சதவீதம் குறைந்த பட்ச சம்பள அதிகரிப்பு ஏற்படும் என பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, முழுநேர வேலைக்கு, மாதாந்திர குறைந்தபட்ச ஊதியம் 1,645.58 யூரோக்களாக காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 1,269 யூரோக்களில் இருந்து குறைந்தபட்ச ஊதியம் மே மாதம் முதலாம் திகதி மு1,302.64 யூரோக்களாக அதிகரிக்கும். குறைந்த பட்ச ஊதிய அதிகரிப்பிற்கமைய, ஒரு மணித்தியாலத்திற்கான குறைந்தபட்ச ஊதியம் 10.57 யூரோக்களில் இருந்து 10.85 யூரோக்களாக அதிகரிக்கும்.
இந்த அதிகரிப்பு இரண்டு மில்லியனுக்கும் அதிகமான ஊழியர்களுக்கு நேரடியாக பயனளிக்கும் என குறிப்பிடப்படுகின்றது. அதேவேளை பணவீக்கம் காரணமாக ஜனவரி மாதத்தில், ஏற்கனவே 0.9 சதவீதம் ஊதிய உயர்வு ஏற்பட்டது.
எனினும் அதன் பின்னர் கொரோனா மற்றும் உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் பணவீக்கம் எதிர்பாராத உயர்வை எட்டியுள்ளது.
இந்த நிலையில் பொது மக்களின் பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு இந்த ஊதிய உயர்வை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டதாக பிரான்ஸ் தொழிலாளர் அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேவேளை ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் மரீன் லு பென் ஆகிய இருவரும் இந்த அதிகரிப்பிற்கு அப்பால் செல்ல விரும்பவில்லை எனவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.