உணவை வேகமாக சாப்பிடுகிறீர்களா..? உஷாரா இருங்க.. இந்த பிரச்சினையை ஏற்படுத்துமாம்
நமது உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் உணவிலிருந்துதான் கிடைக்கிறது. எனவே அந்த உணவை ஆரோக்கியமான உணவாக சாப்பிட வேண்டியது அவசியமாகும்.
அதிலும் உணவை சாப்பிடுகிறீர்கள் என்பது மட்டுமல்ல எப்படி சாப்பிடுகிறீர்கள் என்பதும் உங்கள் ஆரோக்கியத்திற்கு முக்கியமானதாகும்.
சாப்பிடும் முறை என்று வரும்போது மெதுவாக சாப்பிடுவது மற்றும் வேகமாக சாப்பிடுவது என்று இரண்டு வகை உள்ளது.
பலரும் வேகமாக சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இது மிகவும் ஆபத்தான பழக்கமாகும். ஏனெனில் வேகமாக சாப்பிடும்போது அது பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகின்றது. தற்போது அவை ஏற்படுத்தும் பக்கவிளைவு என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
வயிறு நிறைந்த உணர்வு
வேகமாக சாப்பிட்டால், சாப்பிட்டதற்கான திருப்தியே இருக்காது. நிறைவான உணவாகவும் இருக்காது. ஆனால் வயிறு நிறைந்த உணர்வு மட்டும் இருக்கும்.
அதற்குக் காரணம், மூளைக்குக் கட்டளையிடப்பட்டு அது வேலை செய்வதற்கு முன்னரே எல்லாம் முடிந்துவிடுவதுதான் காரணம். இதனால் கலோரிகள் அதிகமாகின்றன.
உடல் எடை அதிகரிப்பு
போதுமான ஆற்றல் இல்லாதபோது அவை கொழுப்பாகச் சேர்ந்து உடல் எடை அதிகரிக்கிறது. உடல் எடை மட்டுமின்றி நீரிழிவு நோய் , இரத்தக் கொதிப்பு, இதயப் பிரச்னை, அஜீரணம் போன்ற நோய்களும் வரும் வாய்ப்புள்ளது.
எப்படி சாப்பிட வேண்டும்?
ஒரு வாய் உணவை குறைந்தது 20 முறையாவது மென்று சாப்பிட வேண்டும். அப்போதுதான் அந்த உணவின் ருசி, மணம் மூளைக்குச் சென்று திருப்தி கிடைக்கும். இந்தப் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்டால் நீங்களே நினைத்துப் பார்க்காத வகையில், உங்கள் உடல் எடை குறையும் .