கொரோனாவிலிருந்து மீண்ட பிறகு உடல்நல பிரச்னைகள்; WHO கவலை
கொரோனாவிலிருந்து மீண்ட பிறகு உடல்நல பிரச்னைகள் எழுவது கவலை அளிக்கும் விதமாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 20 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஏற்படும் தாக்கம் உடல் அளவில் பெரும் சிக்கலை ஏற்படுத்திவரும் நிலையில், கொரோனாவிலிருந்து மீண்ட பிறகு எழும் பிரச்னைகள் எண்ணில் அடங்காவையாக உள்ளன.
கொரோனாவிலிருந்து மீண்ட பிறகு எழும் உடல் நில பிரச்னைகளால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்த விவரங்கள் தங்களிடம் இல்லை. ஆனால் இது கவலை அளிக்கும் விதமாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு தொழில்நுட்பப்பிரிவின் தலைவர் மரியா வான் கெர்கோவ் (Maria Van Kerkhove)கூறுகையில், "
இம்மாதிரியான நீண்ட கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மருத்துவ உதவி பெற்றுக் கொள்ள வேண்டும். எவ்வளவு நாள்கள் வரை இப்பிரச்னைகள் நீள்கிறது என எங்களுக்கு தெரியாது. இதுகுறித்து மேலும் புரிந்து கொள்ள ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளோம்" என தெரிவித்துள்ளார்.