ரொறன்ரோ மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை: வெள்ளிக்கிழமை வரை நீடிக்கும்
ஈரப்பதம் அடுத்த 3 நாட்களுக்கு 40 என இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், ரொறன்ரோவில் வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் கனடா வெளியிட்ட செய்தி குறிப்பில், புதன்கிழமை, வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பகல்நேர வெப்பநிலை அதிகபட்சமாக இருபது முதல் முப்பது வரை இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது.
இதனால் இந்த நாட்களில் ஈரப்பதம் 40 என நீடிக்கும் என்றே கூறப்படுகிறது. மேலும், இரவு நேரங்களில் வெப்ப அலையிலிருந்து நகர மக்களுக்கு ஓரளவு நிம்மதி கிடைக்கும் வகையில் வெப்பநிலை 20 டிகிரிக்கு மேல் இருக்கும் என்றே தெரிய வந்துள்ளது.
மட்டுமின்றி, அடுத்த மூன்று நாட்களில் வெப்பமான மற்றும் ஈரப்பதமான காற்றானது காற்றின் தரத்தை மோசமாக்கும் என்று எச்சரித்துள்ளனர்.
இதனிடையே வெப்ப அலை எச்சரிக்கை காரணமாக ரொறன்ரோவின் முக்கிய பகுதிகளில் தனி நபர்கள் ஆசுவாசப்படுத்திக் கொள்ள 7 cooling மையங்களை திறக்கவும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த 7 மையங்களும் பகல் 11 மணி முதல் இரவு 7 மணி வரையில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.