பெய்ஜிங்கில் அதிகரிக்கும் வெப்ப அலை: சீனா அரசின் அதிரடி உத்தரவு!
பெய்ஜிங்கில் வெப்ப அலை அதிகரித்து வருவதால் வெயிலில் பணிபுரியும் அனைத்து வேலைகளையும் நிறுத்தி வைக்குமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
சீனாவின் தெற்கு பகுதியில் மழை மற்றும் வெள்ளமானது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் சூழலில் மாறாக வடக்குப் பகுதியில் கடும் வெப்ப அலை வீசி வருகின்றது.
இதேவேளை, பெய்ஜிங்கில் 1961 ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்த ஆண்டு தொடர்ந்து 10 நாட்களிற்கு மேலாக 35 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பம் பதிவாகியுள்ளது.
இனிவரும் நாட்களில் வெப்பம் 40 டிகிரி செல்சியஸிற்கு அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது.
எனினும், பெய்ஜிங்கில் அதிகளவான வெப்ப அலைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் மக்களை வீடுகளிலேயே இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், இந்த மாதம் சீன பல்வேறு இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.