இலங்கைக்கு 172 ரன்கள் இலக்கு!! வங்கதேச வீரரிடம் வார்த்தை மோதல்- மைதானத்தில் நடந்த பரபரப்பு
உலகக்கோப்பை டி20 தொடரில் இலங்கை - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்து வருகிறது.
தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி, மக்முதுல்லா தலைமையிலான வங்கதேசத்துடன் மோதும் நிலையில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணியின் துவக்க வீரர் லிட்டன் தாஸ் 16 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஷாகிப் அல் ஹசன் 10 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
அதேசமயம் மறுமுனையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மற்றொரு துவக்க வீரர் முகமது நயிம் 62 ரன்கள் குவித்து அடித்தளம் அமைத்துக்கொடுத்தார். ஆபிப் உசைன் 7 ரன்களே எடுத்தார்.
அதிரடியாக ஆடிய முஷ்பிகுர் ரஹிம் அரை சதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்த, வங்கதேச அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் சேர்த்தது.
இந்த போட்டியில் இலங்கை பந்துவீச்சாளர் லஹிரு குமார பந்துவீச்சில் வங்கதேச பேட்ஸ்மேன் டிடன் தாஸ், ஷனகாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
இதன்பின்னர் களத்தில் குமார, தாஸ் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு பரபரப்பு நிலவியது,
பின்னர் பீல்டிங்கில் இருந்த மற்ற இலங்கை வீரர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி பிரித்துவிட்டனர்.
Feel the heat of #ICCT20WorldCup2021 some harsh words exchanged between Liton Das & Lahiru Kumara after Das was caught at mid-off in #SlvsBan. Upcoming #PakvsIndia pic.twitter.com/eUbVfm5q3Z
— Haroon Janjua (@JanjuaHaroon) October 24, 2021